முருங்கை இலை வளர்ச்சி ஊக்கி

முருங்கை இலை காய்கறி பயிரிக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கி மற்றும் நல்ல மகசூல் தருகிறது.*

1.முருங்கை இலை எடுத்து  அம்மியில் அரைத்து சாறு எடுத்து 5 நாள் ஒரு வளியில் போட்டு மூடி வைத்து விட்டு 6 ஆம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கலந்து செடியின் வேர் பகுதியில் ஊற்றினால் காய்கறி பயிர் நன்றாக காய்கிறது.(செய்முறை ஒன்று)

2. பிளாஸ்டிக்  பக்கெட்டில் முருங்கை இலை பறித்து எடுத்து அதன் முழுகும் அளவுக்கு தண்ணி ஊற்ற வேண்டும்.

உப்பு மற்றும் புளி சிறிதளவு (புளி சாறை எடுக்கும் தண்மை கொண்டது ) போட்டு பிளாஸ்டிக் பக்கெட்டில் மூடி வைத்து 5 நாள் பிறகு சாறு எடுத்து 6 ஆம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கலந்து செடியின் வேர் பகுதியில் ஊற்றினால் காய்கறி பயிர் நன்றாக காய்கிறது.(செய்முறை இரண்டு)

மேலும் இந்த சாற்றை  1 லிட்டர் தண்ணீரில் 150 மல்லி வாரம் ஒரு முறை காய் கறி செடியின் மீது தெளிக்க காய்கறி செடி நன்றாக காய்கிறது மற்றும் எடை கூடுதலாக கிடைகிறது மேலும் ஒரு வாரம் முதல்  காய்கறி கெடாமல்  பசுமையாக இருக்கிறது.


இந்த முயற்சி ஆப்பிரிக்கா நாட்டில் ஒருவர் செய்து பார்த்து வெற்றி கண்டார் அதன்பின் திரு.ராஜா மணி ஐயா இதனை பரப்பி விட்டார் மற்றும் செய்து பார்த்து ஒரு தக்காளி 150 கிராம் எடை பலபலன் தந்தது அவருக்கு.

முருங்கை இலை இல்லை என்றால் அகத்தி இலை அல்லது இயற்கை விளைந்த கீரை வகைகளை பயன் படுத்தலாம்.

Comments

Popular posts from this blog

Soil Science

Agricultural Statistics

Agronomy