Posts

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

Image
Prepared by R.Rajkumar,(B.Sc Agriculture), Sundaresapuram, Ariyalur District.          விவசாயிகள்  விவசாயிகளுக்காக விவசாயிகளே நடத்தும் நிறுவனம்                         உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல்     (Farmers Producer Group Formation) நிறுவனம்            உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்பது விவசாயிகள் பங்குதாரர்களாக ஒருங்கிணைந்து நடத்தும் விவசாயிகளுக்கே சொந்தமான நிறுவனம் ஆகும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறது. இந்த திட்டமானது தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்தந்த ஊர் விவசாயிகள் அரசின் உதவியுடன் சிறப்பாக பலனடைந்து வருகின்றனர். உதாரணமாக நமது மாவட்டமான அரியலூர் மாவட்டத்தில் மூன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. ஶ்ரீ கலியுக வரதராஜபெருமாள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கல்லங்குறிச்சி , மண்ணுழி , தேளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயிகளால்   சிறப்பா