அருகம்புல்களில் இலை பனி

அருகம்புற்களில் இலைகளின்மேல்  நுரைக்கான காரணம்தான் என்ன?
.
வயல் வரப்புகளில் உள்ள அருகம்புற்களில் இலைகளின்மேல் பனி இல்லாத காலத்தில்கூட அடுத்தடுத்து பல இடங்களில்   எச்சிலை காறித்துப்பியது போல நுரை தென்படும்.
.
 உலகில் பல வித்தியாசமான விசயங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றாலும் அதற்கான விடையை நாம் அறிய முற்படுவதே இல்லை.
.
சரி.
.
அதற்கான காரணம்தான் என்ன?
.
அருகம்புல் குடும்பத்தில் உள்ள புற்களில் மட்டும் தனது சந்ததியை பெருக்கும் வல்லமை கொண்ட
   இருகோடுகள் உள்ள இலைத் தத்துப்பூச்சிதான் முழு முதற்காரணமே.
Two Lined Spittlebug ( Prosapia bicincta) எனப்படும்  இலைத் தத்துப்பூச்சி தனது முட்டைகளை இட்டுவிட்டு சென்றபின் அதிலிருந்து வெளியாகும் இளம் குஞ்சுகள் தனித்தனியே இலையின் நுனிப்பகுதியில் சாற்றை உறிஞ்சும் போது அதிகப்படியான சாறு இளம் குஞ்சுகளிடமிருந்து சுரக்கும் வழவழப்பான திரவத்தின் மூலம் கெட்டிப்பட்டு அதற்கு பாதுகாப்பாக/ அரணாக அமைகிறது.
.
வெயில் அடித்தாலும்  அந்த  நுரை எளிதில் ஆவியாவதில்லை.
அந்த இளம் குஞ்சுகள் அருகம்புல்லின் சாற்றை தேவையான அளவு உறிஞ்சி நான்கு முறை தோல் உறித்து வளர்ந்தவையான உருமாறி தனது வாழ்வை தொடர்கின்றன.
.
இதுதான் வயல் வரப்புகளில் உள்ள அருகம்புற்களில் இலைகளின்மேல் பனி இல்லாத காலத்தில்கூட அடுத்தடுத்து பல இடங்களில்   எச்சிலை காறித்துப்பியது போல நுரை தென்படும் காரணமாகும்

Comments

Popular posts from this blog

Soil Science

Agricultural Statistics

Agronomy